|
Tuesday, March 20, 2012
புகைப்படங்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற் போல் மாற்றி அமைக்க
ஒரே நேரத்தில் அனைத்து மென்பொருள்களையும் நிறுவுவதற்கு...
கணணியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழந்து போகும் போது, மீண்டும் அனைத்து மென்பொருள்களையும் நிறுவ வேண்டிய நிலை ஏற்படும். இயங்குதளத்தை மீண்டும் நிறுவுவது கூட மிக சுலபம், ஆனால் அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் நிறுவுவது என்பது கடினமான ஒன்று. இந்த வேலையை சுலபமாக்க ஒரு மென்பொருள் உள்ளது. ஒட்டு மொத்தமாக எந்தெந்த மென்பொருள்களை நிறுவ வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுத்து கொண்டு, ஒரே நேரத்தில் கணணியில் நிறுவி விடலாம். நீங்கள் இயங்குதளத்தை புதிதாக நிறுவிய பிறகு இந்த Ninite தளத்திற்கு செல்லுங்கள். அங்கு நாம் அடிக்கடி உபயோகிக்கும் பெரும்பாலான மென்பொருள்கள் பட்டியலிடப்பட்டு இருக்கும். உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு, கீழே உள்ள Get Installer என்ற பட்டனை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான மென்பொருள்களை தரவிறக்கி கொள்ளுங்கள். தற்போது அந்த மென்பொருளை இயக்கினால் நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து மென்பொருள்களும் தானாக தரவிறக்கப்பட்டு, உங்களது கணணியில் நிறுவப்பட்டு விடும். |
டிராவிட்டுக்கு சிறந்த மாற்று விரர் கோஹ்லி தான்: கங்குலி புகழாரம்
இந்திய கிரிக்கட் அணியில் டிராவிட்டுக்கு சிறந்த மாற்று வீரராக கோஹ்லி திகழ்வார் என்று முன்னாள் இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி கூறியுள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழும் வீராட் கோஹ்லி, மிக சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 148 பந்துகளில் 183 ஓட்டங்கள் குவித்தார். கடந்த 5 போட்டிகளில் 400 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவில் கடந்த 28 ம் திகதி நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் 86 பந்துகளில் 133 ஓட்டங்கள் குவித்தார். இதுவரை 85 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ள அவர் 11 சதம் அடித்துள்ளார். கோஹ்லி குறித்து இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி நிகழ்ச்சி ஒன்றில் கூறுகையில், சமீபத்தில் இந்திய கிரிக்கட் அணியில் இருந்து முழுவதுமாக ஒய்வு பெற்ற ராகுல் டிராவிட்டின் இடத்திற்கு ஒரு சிறந்த வீரர் கிடைத்துவிட்டார் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், 148 பந்துகளில் 183 ஓட்டங்களை எடுத்து சாதனை படைத்த கோஹ்லியைப் போன்றதொரு வீரரை இதுவரை என் கிரிக்கட் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்றும் கங்குலி பாராட்டு மழை பொழிந்துள்ளார். |
உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் தண்ணீர்
உடலை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள நாம் எத்தனையோ முறைகளைப் பின்பற்றுகின்றோம். உடல்நிலை பாதித்தால் அதனை சரி செய்யவும் எத்தனையோ சிகிச்சை முறைகளைக் கையாளுகிறோம்.ஆனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும்,
பாதிக்கப்பட்ட உடலை மேம்படுத்தவும் தண்ணீர் நல்ல சிகிச்சையாக உள்ளது என்றால் அது மிகையாகாது.உடல் இளைப்பது, எய்ட்ஸ் பாதித்தவர்கள் உடலை நோய்களில் இருந்து காப்பாற்றுவது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது என்றால் அது தண்ணீர் சிகிச்சைதான்.
தண்ணீர் சிகிச்சை என்றால் ஏதோ புதிய சிகிச்சை முறை என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிப்பதுதான் தண்ணீர் சிகிச்சையாகும்.
பலரும் சாப்பாடு சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பார்கள். அதற்குப் பிறகு தண்ணீர் பக்கமே போக மாட்டார்கள். அப்படியானவர்களது உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்று எண்ணிப் பார்த்தால் அவர்களது நெஞ்சே ஒரு நிமிடம் நின்று விடும்.
தண்ணீர் நம்மை புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. தண்ணீர் குடிப்பதை ஒரு பழக்கமாகக் கொண்டு வர வேண்டும். நாளொன்றுக்கு 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். கோடை காலத்தில் இன்னும் அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும்.
அவ்வப்போது தண்ணீர் அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளையும் அடிக்கடி தண்ணீர் குடிக்க வையுங்கள்.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பலரும் தண்ணீர் அதிகமாக அருந்த மாட்டார்கள். அதற்கு முக்கியக் காரணம் பள்ளிகளில் கழிவறையை அடிக்கடி பயன்படுத்த முடியாது என்பதுதான்.
எனவே பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளின் நிலைமையை சொல்லிப் புரிய வையுங்கள். குழந்தைகளுக்கும் போதுமான நீர் கொடுத்தனுப்புங்கள்.
என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றினாலும் குறையாத உடல் எடை, அதிகப்படியான தண்ணீர் குடிப்பதால் குறைவதைக் கண்கூடாக பார்க்கலாம்.
உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கியத் தேவை. தண்ணீர் குடித்தால் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடவாழத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கிக் கொண்டு கடைசியில் உடலில் இருக்கும் தேவையற்ற விஷயங்களை எடுத்துக் கொண்டு வெளியேறி விடுகிறது.
எனவே அதிகமாகத் தண்ணீர் குடித்து வருபவர்களுக்கு சிறுநீரக பிரச்சினை, குடல் பிரச்சினை என்று எதுவும் வராமல் இருக்கும்.
நீண்ட நாள் வாழ நல்லா முத்தம் கொடுங்க!
காதலின் மொழி முத்தம். காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பை பரிமாற பயன்படுத்தும் ஆயுதம். அந்த முத்தம் மனிதர்களுக்குள் எண்ணற்ற ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆர்வம் அதிகரிக்கும்
இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பெற்றோர் பேசி திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டுக் கொள்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வேலைக்குச் செல்லும் முன் தன் மனைவியை முத்தமிட்டுச் செல்பவர்கள் அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக ஆர்வமுடன் வேலை பார்த்ததாக அந்த ஆய்வு ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் 80 ஆண்களை முத்தமிட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
இதழோடு இதழை இணைத்து முத்தமிடுகையில் பரிமாறப்படும் எச்சிலில், புரதம், கொழுப்பு, ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதேசமயம் 5 மில்லியன் பாக்டீரியாக்களும் பரிமாறப்படுகிறதாம்.
தொப்பை குறையும்
ஒருமுறை முத்தமிடுவதால் முகத்தின் 29 தசைகள் இயங்கவைக்கப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு முத்தமிடுகிறோமோ அந்த அளவிற்கு முகத்தில் சுருக்கம் விழுவது தவிர்க்கப்படும். ஒருமுறை முத்தமிடுவதன் மூலம் உடலில் 3 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறதாம். அதேசமயம் லிப் கிஸ் என்றால் 5 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் முத்தமிடுவதன் மூலம் 26 கலோரிகள் எரிக்கப்படுகிறதாம். அதனால் தொப்பை குறைவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் குறைகிறது
66 சதவிகிதம் பேர் முத்தமிடுகையில் தனது முகத்தை மூடிக்கொள்கின்றனர். மீதமுள்ள 34 சதவிகிதம் பேர்தான் கண்களைத் திறந்து தனது பார்ட்னரை பார்த்து முத்தமிடுகின்றனராம். முத்தமிடுவதால் பெண்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. அதேசமயம் ஆண்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம்.
ஆர்வம் அதிகரிக்கும்
இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பெற்றோர் பேசி திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டுக் கொள்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வேலைக்குச் செல்லும் முன் தன் மனைவியை முத்தமிட்டுச் செல்பவர்கள் அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக ஆர்வமுடன் வேலை பார்த்ததாக அந்த ஆய்வு ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் 80 ஆண்களை முத்தமிட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
இதழோடு இதழை இணைத்து முத்தமிடுகையில் பரிமாறப்படும் எச்சிலில், புரதம், கொழுப்பு, ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதேசமயம் 5 மில்லியன் பாக்டீரியாக்களும் பரிமாறப்படுகிறதாம்.
தொப்பை குறையும்
ஒருமுறை முத்தமிடுவதால் முகத்தின் 29 தசைகள் இயங்கவைக்கப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு முத்தமிடுகிறோமோ அந்த அளவிற்கு முகத்தில் சுருக்கம் விழுவது தவிர்க்கப்படும். ஒருமுறை முத்தமிடுவதன் மூலம் உடலில் 3 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறதாம். அதேசமயம் லிப் கிஸ் என்றால் 5 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் முத்தமிடுவதன் மூலம் 26 கலோரிகள் எரிக்கப்படுகிறதாம். அதனால் தொப்பை குறைவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் குறைகிறது
66 சதவிகிதம் பேர் முத்தமிடுகையில் தனது முகத்தை மூடிக்கொள்கின்றனர். மீதமுள்ள 34 சதவிகிதம் பேர்தான் கண்களைத் திறந்து தனது பார்ட்னரை பார்த்து முத்தமிடுகின்றனராம். முத்தமிடுவதால் பெண்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. அதேசமயம் ஆண்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம்.
அடிக்கடி உறவு ஆரோக்கியத்திற்கு நல்லது!!!
செக்ஸ் உறவு என்பது வெறும் உடல் ரீதியான சந்தோஷத்திற்கானது என்ற எண்ணம் இருந்தால் அதை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது. காரணம், காதலுக்கும், காமத்திற்குமான வடிகால் மட்டுமல்ல செக்ஸ், அதையும் தாண்டி நமது உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் அரு மருந்துதான் செக்ஸ் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மனமொத்து இரு உடல்கள் இணையும்போது, அந்த இருவருக்குமே ஏகப்பட்ட பலன்கள் கிடைப்பதாக இவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், வாரத்திற்கு இத்தனை நாள், மாதத்திற்கு இத்தனை நாள் என்று கணக்குப் பார்க்காமல் தினசரி செக்ஸ் உறவு கொள்வது மிக மிகச் சிறந்தது என்பதும் இவர்களது வாதம்.
தினசரி செக்ஸ் உறவு கொள்வதால் பல பலன்கள் கிடைக்கிறதாம். உடல் எடை குறைகிறது, மன அழுத்தம் முற்றிலும் நீங்குகிறது, நல்ல தூக்கம் கிடைக்கிறது, உடல் ஆரோக்கியம் சீராக இருக்க உதவுகிறது என்று இவர்கள் அந்த பலா பலன்களை அடுக்குகிறார்கள்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம், வாரத்திற்கு 2 முறைக்கும் மேல் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவதாக கண்டறிந்துள்ளனர். மாதத்திற்கு ஒருமுறை செக்ஸ் வைத்துக் கொள்வோரை விட இவர்களுக்கு மிக மிக குறைந்த அளவிலான ரிஸ்க்கே இருக்கிறதாம்.
தினசரி செக்ஸ் உறவு வைத்துக் கொள்வோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் இம்யூனோகுளோபின் ஏ (IgA) சுரப்பு அதிகரிக்கிறதாம். இதனால் சாதாரண காய்ச்சல், சளித் தொல்லை போன்றவை அவ்வளவு சீக்கிரம் அவர்களை அண்டுவதில்லையாம்.
குடும்பப் பாரம், குடும்பத்தில் ஏற்படும் குழப்பம், அலுவலகப் பணிகள் மற்றும் பணியாளர்களால் ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படும் மன அழுத்தங்களைப் போக்க அருமையான மருந்து செக்ஸ்தான் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும், செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது இந்த மன அழுத்தம் போகும் இடமே தெரிவதில்லை என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
மேலும் தினசரி உறவு வைத்துக் கொள்வோருக்கு மிகுந்த தன்னம்பிக்கையும், உற்சாகமும், உத்வேகமும் கிடைக்கிறதாம். மற்றவர்களை விட இவர்கள் அதிக சந்தோஷத்துடன் இருக்கிறார்களாம். செய்ய வேண்டிய வேலைகளை சட்டுப்புட்டென்று முடிப்பதிலும் இவர்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்களாம்.
அதேபோல உடல் வலி, தலைவலி உள்ளிட்ட பலவகையான வலிகளைப் போக்கும் சிறந்த வலி நிவாரணியாகவும் செக்ஸ் விளங்குகிறதாம். மாத்திரை சாப்பிடுவற்குப் பதில் உறவு கொள்வது நல்ல தீர்வு என்பது இவர்களின் வாதம். காரணம், ஆர்கஸம் எனப்படும் உச்சத்தை அடையும்போது நமது உடலில் ஆக்ஸிடாக்ஸின் எனப்படும் ஹார்மோன் வழக்கத்தை விட ஐந்து மடங்கு அதிகமாக சுரக்கிறதாம். இது தலைவலி, உடல் வலி உள்ளிட்டவற்றை விரட்டும் வல்லமை கொண்டதாகும்.
அதேபோல ஒருவருக்கு நீண்ட உச்ச நிலை ஏற்படும்போது டீஹைட்ரோஎபினான்ட்ரோஸ்டீரான் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது நோய் எதிர்ப்புத் தன்மையை கொடுக்கக் கூடியதாகும். இதனால் நமது சருமம் மிகச் சிறப்பாகவும், சீக்கிரம் சுருக்கம் விழாமலும் பார்த்துக் கொள்கிறதாம். வாரத்திற்கு 2 முறை உச்சத்தை அடையும் ஆண்கள், சில வாரங்களுக்கு ஒருமுறை உறவு வைத்துக் கொள்பவர்களை விட ஆரோக்கியமாக இருக்கிறார்களாம்.
செக்ஸ் உறவின் மூலம் நமது ரத்த ஓட்டமும் சீராக இருக்கிறதாம். செக்ஸ் உறவின்போது நமது உறுப்புகளுக்கும், செல்களுக்கும் புது ரத்தம் பாய்வதே இதற்குக் காரணம். கிட்டத்தட்ட ஒரு ரத்த சுத்திகரிப்பே நடந்து விடுகிறது, செக்ஸ் உறவின்போது. மேலும் பழைய ரத்தம் போய் புது ரத்தம் பாயும்போது பழைய ரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் உள்ளிட்ட பிற பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் வெளியேறுவதால், நமது உடலும் சோர்வை விட்டு உதறி புதுப்பிக்கப்பட்ட உணர்வுக்கு மாறுகிறது. இதுவே உடல் ரீதியாக நாம் உற்சாகம் பெற முக்கியக் காரணம்.
அழகான, நிறைவான, பூரணமான செக்ஸ் உறவை மேற்கொள்வோருக்கு அருமையாக தூக்கம் வரும். எனவே தூக்கம் வராமல் தவிப்போருக்கும் அருமருந்தாக இருக்கிறது செக்ஸ்.
இப்படி ஏகப்பட்ட வழிகளில் நமது உடல் ரீதியான பல மாற்றங்களுக்கு செக்ஸ் உறவு வித்திடுகிறது. எனவேதான் அவ்வப்போது வைத்துக் கொள்வதை விட அனுதினமும் உறவு கொள்வது மிக மிகச் சிறந்தது, அதில் தவறேதும் இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மனமொத்து இரு உடல்கள் இணையும்போது, அந்த இருவருக்குமே ஏகப்பட்ட பலன்கள் கிடைப்பதாக இவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், வாரத்திற்கு இத்தனை நாள், மாதத்திற்கு இத்தனை நாள் என்று கணக்குப் பார்க்காமல் தினசரி செக்ஸ் உறவு கொள்வது மிக மிகச் சிறந்தது என்பதும் இவர்களது வாதம்.
தினசரி செக்ஸ் உறவு கொள்வதால் பல பலன்கள் கிடைக்கிறதாம். உடல் எடை குறைகிறது, மன அழுத்தம் முற்றிலும் நீங்குகிறது, நல்ல தூக்கம் கிடைக்கிறது, உடல் ஆரோக்கியம் சீராக இருக்க உதவுகிறது என்று இவர்கள் அந்த பலா பலன்களை அடுக்குகிறார்கள்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம், வாரத்திற்கு 2 முறைக்கும் மேல் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவதாக கண்டறிந்துள்ளனர். மாதத்திற்கு ஒருமுறை செக்ஸ் வைத்துக் கொள்வோரை விட இவர்களுக்கு மிக மிக குறைந்த அளவிலான ரிஸ்க்கே இருக்கிறதாம்.
தினசரி செக்ஸ் உறவு வைத்துக் கொள்வோருக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்கும் இம்யூனோகுளோபின் ஏ (IgA) சுரப்பு அதிகரிக்கிறதாம். இதனால் சாதாரண காய்ச்சல், சளித் தொல்லை போன்றவை அவ்வளவு சீக்கிரம் அவர்களை அண்டுவதில்லையாம்.
குடும்பப் பாரம், குடும்பத்தில் ஏற்படும் குழப்பம், அலுவலகப் பணிகள் மற்றும் பணியாளர்களால் ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படும் மன அழுத்தங்களைப் போக்க அருமையான மருந்து செக்ஸ்தான் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும், செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது இந்த மன அழுத்தம் போகும் இடமே தெரிவதில்லை என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.
மேலும் தினசரி உறவு வைத்துக் கொள்வோருக்கு மிகுந்த தன்னம்பிக்கையும், உற்சாகமும், உத்வேகமும் கிடைக்கிறதாம். மற்றவர்களை விட இவர்கள் அதிக சந்தோஷத்துடன் இருக்கிறார்களாம். செய்ய வேண்டிய வேலைகளை சட்டுப்புட்டென்று முடிப்பதிலும் இவர்கள் சுறுசுறுப்பாக இருக்கிறார்களாம்.
அதேபோல உடல் வலி, தலைவலி உள்ளிட்ட பலவகையான வலிகளைப் போக்கும் சிறந்த வலி நிவாரணியாகவும் செக்ஸ் விளங்குகிறதாம். மாத்திரை சாப்பிடுவற்குப் பதில் உறவு கொள்வது நல்ல தீர்வு என்பது இவர்களின் வாதம். காரணம், ஆர்கஸம் எனப்படும் உச்சத்தை அடையும்போது நமது உடலில் ஆக்ஸிடாக்ஸின் எனப்படும் ஹார்மோன் வழக்கத்தை விட ஐந்து மடங்கு அதிகமாக சுரக்கிறதாம். இது தலைவலி, உடல் வலி உள்ளிட்டவற்றை விரட்டும் வல்லமை கொண்டதாகும்.
அதேபோல ஒருவருக்கு நீண்ட உச்ச நிலை ஏற்படும்போது டீஹைட்ரோஎபினான்ட்ரோஸ்டீரான் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது நோய் எதிர்ப்புத் தன்மையை கொடுக்கக் கூடியதாகும். இதனால் நமது சருமம் மிகச் சிறப்பாகவும், சீக்கிரம் சுருக்கம் விழாமலும் பார்த்துக் கொள்கிறதாம். வாரத்திற்கு 2 முறை உச்சத்தை அடையும் ஆண்கள், சில வாரங்களுக்கு ஒருமுறை உறவு வைத்துக் கொள்பவர்களை விட ஆரோக்கியமாக இருக்கிறார்களாம்.
செக்ஸ் உறவின் மூலம் நமது ரத்த ஓட்டமும் சீராக இருக்கிறதாம். செக்ஸ் உறவின்போது நமது உறுப்புகளுக்கும், செல்களுக்கும் புது ரத்தம் பாய்வதே இதற்குக் காரணம். கிட்டத்தட்ட ஒரு ரத்த சுத்திகரிப்பே நடந்து விடுகிறது, செக்ஸ் உறவின்போது. மேலும் பழைய ரத்தம் போய் புது ரத்தம் பாயும்போது பழைய ரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் உள்ளிட்ட பிற பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் வெளியேறுவதால், நமது உடலும் சோர்வை விட்டு உதறி புதுப்பிக்கப்பட்ட உணர்வுக்கு மாறுகிறது. இதுவே உடல் ரீதியாக நாம் உற்சாகம் பெற முக்கியக் காரணம்.
அழகான, நிறைவான, பூரணமான செக்ஸ் உறவை மேற்கொள்வோருக்கு அருமையாக தூக்கம் வரும். எனவே தூக்கம் வராமல் தவிப்போருக்கும் அருமருந்தாக இருக்கிறது செக்ஸ்.
இப்படி ஏகப்பட்ட வழிகளில் நமது உடல் ரீதியான பல மாற்றங்களுக்கு செக்ஸ் உறவு வித்திடுகிறது. எனவேதான் அவ்வப்போது வைத்துக் கொள்வதை விட அனுதினமும் உறவு கொள்வது மிக மிகச் சிறந்தது, அதில் தவறேதும் இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
Subscribe to:
Posts (Atom)