Wednesday, July 18, 2012

மரணத்திற்குப் பின்னர்: ஓர் அலசல்

நேற்று எனது கிராமத்தில் ஒரு வயதான தாத்தா இறந்து விட்டார். அவர் இறந்த பிறகு என்ன நடக்கும், அவர் எங்கே செல்வார் என்று ஒரே குழப்பமாக இருந்தது, அந்த குழப்பத்தின் தேடல் தான் இந்த பதிவு.

அறிவியலானது பிரப்பினைப் பற்றி அதமாகவே அழகாக கூறுகிறது, ஆனால் இறப்பு என்பது மனிதனுக்கும் சரி, அறிவியலுக்கும் சரி சற்று சவாலாகவே உள்ளது.
படங்கள் அதிகமாக இணைக்கலாம் என நினைத்தேன், சில படங்கள் அருவருப்பாக இருக்கும் காரணத்தினால் படங்களை இணைக்கவில்லை.

அறிவியலோ இறப்பினை 'இதய துடிப்பு, மூளையின் செயல்பாடு (மூளை தண்டு உட்பட), மற்றும் சுவாசம் உட்பட உடலின் அனைத்து முக்கியமான உறுப்புகளும் செயல்பாடுகளை நிறுத்துதல்' என்று வரையறுக்கிறது.

ஆனால் மதங்கள் எப்போதுமே அறிவியலுக்கு மாறுபட்டுதான் நிற்கின்றது. உயிர் என்பது உயிராலும் உடலாலும் பிணைக்கப்பட்ட ஒரு கூடு ஆகும். எப்போது அந்த உயிர் நாம் வாழ இது தகுதி இல்லாத பிண்டம் என்று உடலை விட்டு பிரிகிறதோ அதனையே நாம் மதங்கள் இறப்பு வருணிக்கிறது.

சரி இனி நாம் நமது தலைப்பிற்கு வருவோம், மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை மதங்கள் ரீதியா முதலில் நாம் பார்ப்போம்.

இந்து மதம் என்ன கூறுகிறது என்றாள் இறப்பிற்குப் பின்னர் அவர்கள் தேவலோகம், வைகுண்டம், சிவலோகம், சொர்க்கம் அல்லது நரகம் சென்று தங்கள் செய்வினைக்கு ஏற்ப சென்றுவிடுவார்கள். அவர்களது பாவம் கழியும் வரை மீண்டும் மீண்டும் புவியில் மறு ஜென்மம் எடுப்பார்கள் என்று கூறுகிறது.

புத்த மதம் என்ன கூறுகிறது என்றாள் மறு பிறவி என்பதையே அது ஆணித்தரமாகக் கூறுகிறது, அதற்க்கு சாட்சி தற்பொழுது அவர்கள் கடவுளாகப் பார்க்கும் தலாய்லாமாவே சாட்சி. அவர்கள் இறப்பிற்குப் பின் ஆன்மா மட்டுமே உடலை விட்டுப் பிரிந்து, வேறு ஒரு உடலில் சென்று சேர்ந்துவிடுகிறது என்று நம்புகிறார்கள்.

முஸ்லிம் மதத்திலும் மறு பிறப்பு என்று நம்புகிறார்கள்.

மரணத்திற்குப்பின் நடப்பது என்ன என்பதைக் குறித்து கிறிஸ்தவ மதத்திற்குள்ளேயே கொஞ்சம் குழப்ப நிலைதான் உள்ளது. சிலர் மரணத்திற்குப்பின் கடைசி நியாயத்தீர்ப்பு வரை எல்லோரும் "நித்திரையடைகிறார்கள்", அதன்பின்பு பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனைவரும் அனுப்படுவார்கள் என்று கருதுகிறார்கள். வேறு சிலர் மரிக்கும் தருணத்தில்தானே மனிதர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு தங்களது நித்திய குடியிருப்புக்கு அனுப்பப்படுகிறார்கள் என்று நம்புகிறார்கள். இன்னும் சிலர் மனிதர்கள் இறக்கும்பொழுது, கடைசி உயிர்த்தெழுதலுக்கும் கடைசி நியாயத்தீர்ப்பிற்கும், இறுதியாக, தங்கள் நித்திய குடியிருப்புக்கும் காத்திருக்கும்படி ஒரு "தற்காலிகமான" பரலோகத்திற்கோ நரகத்திற்கோ அனுப்படுகிறார்கள் என்று கோருகிறார்கள்.
சரி இனி நாம் அறிவியலின் படி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம்..
இறந்த பிறகு நமது உடலை ஒன்று எரிப்பார்கள், அல்லது புதைப்பார்கள். எரித்தால் 3 நிமிடங்களில் சாம்பல் தான். அப்படிப் புதைத்தால்........? கீழே காணலாம்.

இறப்பின் பொழுது என்ன நடக்கிறதென்றால்

இதயத் துடிப்பு நின்று விடுகிறது...
மூளை மற்றும் தண்டுவடத்தின் செயல்பாடு நின்று விடுகிறது
உடலின் தோல் பகுதி இறுகி சாம்பல் நிறமாக மாறிவிடும்.
அனைத்து சதைப் பகுதிகளும் தளர்ந்தது விடும்
குடல் மற்றும் சிறு நீர்ப்பை காலியாகத் தொடங்கும்..
உடல் பகுதிகள் அனைத்தும் விரைக்கத் தொடங்கும்..
உடலின் வெப்ப நிலையானது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1 முதல் 1.5 டிகிரி வரை வீழ்ச்சியுறும்.

முப்பது நிமிடங்களுக்குப் பிறகு

தோல் நிறமானது ஊதா நிறமாகி மேழுபோல் ஆகாத தொடங்கும்
உதடுகள், கை மற்றும் கால் விரல் நகங்கள் மங்கலாகி இரத்தப் போக்கு இல்லாமல் வெளிர்ந்துவிடும்.
இரத்த ஓட்டம இல்லாமல் உடலானது நீல நிறத்திலிருந்து கருப்பாக மாறத் தொடங்கும் இதற்க்கு கன்றல் (Lividity) என்று பெயர்.
கை மற்றும் கால்கள் நீல நிறமாக மாறத் தொடங்கும்.
இரண்டு கண்களும் மண்டையோட்டினுள் புதிய ஆரம்பிக்கும்.

நான்கு மணி நேரத்திற்குப் பிறகு

உடலின் வெப்பநிலை குறைந்து குறைந்து சில்லென்று ஆகிவிடும். இதற்க்கு rigor mortis என்று பெயர்.
உடலில் உள்ள இரத்தம் உறைந்து கரு ஊதாவாக மாறத் தொடங்கிவிடும்.
உடல் சில்லென்று ஆகுவதாலும், இரத்தம் உரைவதாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கெல்லாம் உடலானது இறகி விரிக்க ஆரம்பித்துவிடுகிறது.


12 மணி நேரத்திற்குப் பிறகு

உடலின் வெப்ப நிலை மேலும் குறைந்து இரிகிவிடும்.

24 மணி நேரத்திற்குப் பிறகு 

உடலின் வெப்ப நிலையானது சுற்றுச் சூழல் வெப்ப நிலைக்குத் திரும்பும்.
ஆண்களின் விந்த்கத்தில் உள்ள விந்து மரணமடைந்து விடும்.
தலை மற்றும் கழுத்து இப்போது ஒரு பச்சை-நீல நிறமாக தோன்றும்.
பச்சை-நீல நிறம் உடல் முழுவதும் பரவத் தொடங்கும்.
முகத்தின் அமைப்பானது மாறி, அடையாளம் மாற ஆரம்பிக்கும்.

மூன்று நாட்களுக்குப் பிறகு

உடலின் வாயுக்கள் விரிவடைந்து உடலானது வீங்கி விரிக்கும்.
உடலானது பெரியதாகி அழுகத் தொடங்கும். இது குளிர் பிரதேசத்தில் மெதுவாகவும், வெப்பப் பிரதேசத்தில் வேகமாவும் நடைபெறும்.
திரவங்கள் வாய், மூக்கு, கண்கள், காதுகள் மற்றும் மலக்குடல் மற்றும் சிறுநீர் ஆகியவை கசியத் தொடங்கும்...

மூன்று வாரங்களுக்குப் பிறகு

தோல், முடி, நகங்கள் ஆகியவை உடலிலிருந்து உதிரத் தொடங்கும்.
உடலின் அதிக அழுத்தத்தைத் தாங்காமல் தோலின் மீது வெடிப்பும், பிளவும் தோன்றும்.
எலும்புகள் அனைத்தும் மண்ணில் மக்க ஆரம்பித்து விடும்.
உடலின் பல் மட்டுமே எஞ்சி இருக்கும். ஏனெனில் இது மட்டும் தான் உடலில் மிகவும் வலிமையானப் பொருள்.

ஆதலால் யாரும் தினமும் காலையில் பல் துலக்க மறக்க வேண்டாம்...

மூன்று மாதங்களுக்குப் பிறகு

வேற என்னங்க நடக்கும் புதைத்த இடத்தில் புள் முளைக்கத் தொடங்கிவிடும்..

தங்கள் கருத்துகளை மறக்காமல் விட்டுச் செல்லுங்கள்.

No comments:

Post a Comment